Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி: வைரலாக்கும் நெட்டிசன்கள்

நவம்பர் 02, 2023 12:15

சென்னை: நேற்று நடந்த லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இதில் விஜய், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா என பல பிரபலங்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பட விழாவில் நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம். அப்படியாக இந்த விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். அந்த கதை “ஒரு நாள் ரெண்டு பேரு காட்டுக்கு போனாங்கலாம். அந்த காட்டுல சிங்கம், புலி, காக்கா, கழுகுன்னு நிறைய இருந்துச்சாம். ஒருவர் முயலை பிடித்துக் கொண்டு வந்தார். இன்னொருவர் எதுவுமே பிடிக்காமல் வந்தார். ஆனால் அவர் யானைக்கு குறி வைத்திருந்தார். முயலை பிடித்து வந்தவரை விட யானைக்கு குறி வைத்தவர் தான் முக்கியமானவர். எப்போதுமே நம்ம முயற்சி பெரிதாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

இந்த யானை, முயல் ஒப்பீடு கதை அப்படியே திருக்குறளில் உள்ளது. திருக்குறளின் பொருட்பாலில் படைச்செருக்கு என்ற அத்தியாயத்தில் 772வது குறளாக இது இடம்பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்